தலையில்இப்படி ஷாம்பு போட்டு குளிப்பவராநீங்கள் அப்ப இது உங்களுக்குத்தான்காத்திருக்கும் அதிர்ச்சி உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும்சுத்தமாகவும் நிர்வகிப்பதால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தல்உருவாகிறது. அதே நேரம் உங்கள்உச்சந்தலை அசுத்தமாக அழுக்குகள் நிறைந்து காணப்பட்டால் , பல்வேறு ரசாயனங்கள் நிறைந்துஇருந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி என்பதுஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.
சில நேரங்களில் வெறும் ஷாம்பூ பயன்படுத்துவதால்மட்டும் உச்சந்தலை சுத்தமாக இருப்பதில்லை. உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சிஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளைகடைபிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாகஇருப்பதாகவும், அதிக எண்ணெய்ப் பசையுடன்இருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் இன்னும்அதிக முறை உங்கள் கூந்தலைசுத்தம் செய்ய வேண்டும் என்றுஉணர்ந்தால், உங்கள் உச்சந்தலைக்கு ஒருசிறப்பான ஸ்க்ரப் தேவை என்பதைநீங்கள் அறிந்து கொள்ளலாம். உச்சந்தலைஸ்க்ரப்
உங்கள்உச்சந்தலையை புத்துணர்ச்சியூட்டி ஆழமான முறையில் சுத்தம்செய்ய நீங்கள் உச்சந்தலை ஸ்க்ரப்பிங்முறையை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள்ஒரு அற்புதத்தை உணர முடியும். இந்தபதிவில் உச்சந்தலையை எவ்வாறு ஸ்க்ரப் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பது பற்றிஉரையாடவிருக்கிறோம்.
ஸ்க்ரப்பிங்என்றால் என்ன?
உச்சந்தலைஸ்கரப் செய்வது என்பதை எளியமுறையில் உணர்த்த வேண்டும் என்றால், உச்சந்தலையின் மேற்படலத்தைப் பிரிப்பது என்பதாகும். நம்முடைய உச்சந்தலையின் ஆரோக்கியம் , நம்முடைய கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை நேரடியாகபாதிக்கிறது. நமக்கு ஆரோக்கியமான மற்றும்வலிமையான தலைமுடி வேண்டுமென்றால் ஆரோக்கியமானஉச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை செய்வதற்காகஉச்சந்தலை ஸ்க்ரப் பயன்படுகிறது.
உச்சந்தலையைஅழுத்தி தேய்த்து ஸ்க்ரப் செய்வதால் அழுக்கு, தூசு மற்றும் ரசாயனக் கட்டமைப்புகள்உச்சந்தலையில் இருந்து வெளியேறி உச்சந்தலைபுத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய்பிசுபிசுப்பு அதிகம் இருந்தால், உச்சந்தலையைஸ்க்ரப் செய்வதால் அதிக எண்ணெய் உற்பத்திகுறைந்து, உச்சந்தலை புதுப்பிக்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இந்தஉச்சந்தலையை ஸ்க்ரப் செய்து கொள்வதுநல்ல பலன்களைத் தரும். இதனால் உங்கள்கூந்தல் பளபளப்பாகவும், வலிமையாகவும், நீளமாகவும் வளர்கிறது. ஆகவே உங்கள் கூந்தலைபுத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள்வழக்கமான கூந்தல் பராமரிப்பில் உச்சந்தலைஸ்க்ரப்பிங் முறையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்மைகள்
- உச்சந்தலையில்மேற்படல பிரிப்பை மேற்கொண்டு இறந்த சரும அணுக்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவற்றைவெளியேற்ற உதவுகிறது.
- உச்சந்தலைஉற்பத்தி செய்யும் அதிக எண்ணெய்யை அகற்றவும்உதவுகிறது.
- தலைமுடியின்வேர்க்கல்களில் உள்ள அடைப்பைப் போக்கஉதவுகிறது.
- உச்சந்தலையில்இரத்த இட்டத்தை அதிகரித்து, கூந்தலின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
- கூந்தல்உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
- கூந்தல்வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- பொடுகுதொந்தரவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
வீட்டிலேயேஸ்க்ரப் செய்வது எப்படி?
அழகு நிலையங்களில் இதனை தொழில் ரீதியில்செய்து வந்தாலும், உங்கள் வசதிக்கேற்ற முறையில்வீட்டிலேயே ஸ்க்ரப் செய்து கொள்வதால்இன்னும் அதிக பலன் கிடைக்கும். மேலும் இயற்கை மூலப்பொருள் கொண்டுஇதனை செய்யும்போது கூந்தலுக்கு எந்த ஒரு தீங்கும்ஏற்படாது.
ஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரை
உச்சந்தலையின்மேற்படலத்தில் உள்ள அழுக்கை நீக்கிஇறந்த அணுக்களை வெளியேற்ற பழுப்பு சர்க்கரை உதவுகிறது. உச்சந்தலையை சுத்தம் செய்ய ஓட்ஸ்உதவுகிறது. மேலும் ஓட்ஸ்ஸில் உள்ளஅழற்சி எதிர்ப்பு தன்மை உச்சந்தலையில் உண்டாகும்அரிப்பைக் கட்டுப்படுத்தி இதமான உணர்வைத் தருகிறது.
தேவையானபொருட்கள்
- இரண்டுஸ்பூன் பழுப்பு சர்க்கரை
- இரண்டுஸ்பூன் ஓட்ஸ் பவுடர்
- ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
- பத்துதுளி பாதாம் எண்ணெய்
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் கண்டிஷனர் சேர்க்கவும்.
2. இதனுடன்ஓட்ஸ், பழுப்பு சர்க்கரை ஆகியவற்றைக்கலந்துக் கொள்ளவும்.
3. பிறகுஇதனுடன் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.
4. எல்லாவற்றையும்ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
5. இந்தகலவையைக் கொண்டு உச்சந்தலையில் 5 நிமிடங்கள்சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
6. பின்புவெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலைமுடியை அலசவும்.
7. பிறகுதலை முடியை நன்றாக காயவிடவும்.
கடல் உப்பு, ஆலிவ் எண்ணெய்மற்றும் எலுமிச்சை சாறு
உச்சந்தலையில்உள்ள கழிவுகளை அகற்றி உச்சந்தலைக்கு இதமளிக்கஉதவுவது கடல் உப்பாகும். ஆலிவ்எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்துகூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட்தன்மை காரணமாக, உச்சந்தலை தீங்கு விளைவிக்கும் கூறுகளில்இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு மற்றும்கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகின்றன.
தேவையானபொருட்கள்
. இரண்டுஸ்பூன் கடல் உப்பு
. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
. அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு
. ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் கடல் உப்பு மற்றும்ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
2. இரண்டையும்ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்தக்கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக்கலக்கவும்.
4. இந்தக்கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
5. உங்கள்உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும்.
6. உங்கள்உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவிசுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ்செய்யவும்.
7. ஒருமிதமான ஷாம்பூ கொண்டு தலையைஅலசவும்.
பாதாம், தேங்காய் எண்ணெய் மற்றும் டீட்ரீ எண்ணெய்
கூந்தலின்வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்பாதாமில் உள்ளன. கூந்தலுக்குள் ஆழமாகஊடுருவி, சேதங்களைத் தடுக்க உதவுகிறது தேங்காய்எண்ணெய். டீ ட்ரீ எண்ணெய்யின்கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புபண்புகள் அரிப்பைப் போக்கி, எரிச்சலைத் தடுத்து, ஆரோக்கியமான உச்சந்தலை உருவாக்கத்தை செயல்படுத்த உதவுகிறது.
தேவையானபொருட்கள்
- இரண்டுஸ்பூன் அரைத்த பாதாம் விழுது
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ஒரு ஸ்பூன் டீ ட்ரீஎண்ணெய்
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக்கலந்துக் கொள்ளுங்கள்.
2. தலைக்குவழக்கம் போல் ஷாம்பூ தேய்த்துகுளித்து அதிக நீரை பிழிந்துக்கொள்ளுங்கள்.
3. பிறகுஇந்த கலவையை தலையில் தடவி, மென்மையாக ஐந்து நிமிடம் சுழல்வடிவத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்
4. பிறகுதலையை அலசுங்கள்.
5. தலையைத்துடைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.
சோள மாவு மற்றும் டீட்ரீ எண்ணெய்
டீ ட்ரீ எண்ணெயுடன் சேர்த்துகலக்கப்பட்ட சோளமாவு உச்சந்தலையை சுத்தம்செய்து சேதங்களைத் தடுக்க உதவுகிறது. இதனால்கூந்தலின் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது.
தேவையானபொருட்கள்
- ஒரு ஸ்பூன் சோளமாவு
- அரை ஸ்பூன் டீ ட்ரீஎண்ணெய்
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் சோளமாவு ஒரு ஸ்பூன்போடவும்.
2. அதில், டீ ட்ரீ எண்ணெய் சேர்த்துஇரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
3. இந்தகலவை கொண்டு உச்சந்தலையில் சுழல்வடிவத்தில் ஐந்து நிமிடங்கள் மென்மையாகமசாஜ் செய்யவும்.
4. பிறகுவழக்கமான முறையில் ஷாம்பூ தேய்த்து தலையைஅலசவும்.
முட்டையின்மஞ்சள் கரு, தயிர் மற்றும்விளக்கெண்ணெய்
முட்டையின்மஞ்சள் கரு கூந்தலின் வேர்கால்களில்புத்துணர்ச்சி தந்து முடி வளர்ச்சியைஊக்குவிக்கிறது. உச்சந்தலையை புத்துணர்ச்சி பெறச் செய்யும் அத்தியாவசியஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன. மேலும்பொடுகைப் போக்கவும் தயிர் உதவுகிறது, விளக்கெண்ணெய், இரத்த ஓட்டத்தை அதிகரித்து , உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேவையானபொருட்கள்
- இரண்டுமுட்டை மஞ்சள் கரு
- ஒரு கிண்ணத்தில் தயிர்
- ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்
- ஒரு ஸ்பூன் உப்பு
செய்முறை
1. மேலேகூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒருகிண்ணத்தில் சேர்க்கவும்.
2. எல்லாவற்றியும்ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்தகலவையை உங்கள் உச்சந்தலையில் தடவிசுழல் வடிவத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
4. பிறகுஒரு ஷவர் கேப் அணிந்துதலையை மூடிக் கொள்ளவும்.
5. 15 நிமிடங்கள்அப்படியே விடவும்.
6. பிறகுஒரு மிதமான ஷாம்பூ கொண்டுதலையை அலசவும்.
தேன், பெப்பெர்மின்ட் எண்ணெய் மற்றும் பழுப்புசர்க்கரை
உச்சந்தலையில்உள்ள ஈரப்பதத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கும் திறன்தேனுக்கு உண்டு. மேலும் உச்சந்தலையின்pH அளவைப் பராமரிக்க தேன் உதவுகிறது. இதனால்உச்சந்தலை சீரான முறையில் கண்டிஷன்செய்யப்படுகிறது. இதனால் சேதங்கள் தடுக்கப்படுகின்றன. பெப்பெர்மின்ட் எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களைபுத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தல்வளர்ச்சிக்கு உதவுகிறது.
தேவையானபொருட்கள்
- ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன்
- ஒரு ஸ்பூன் பெப்பெர்மின்ட் எண்ணெய்
- ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை
செய்முறை
1.மேலேகூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒருகிண்ணத்தில் போடவும்.
2. எல்லாவற்றையும்ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்தகலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
4. பிறகுமென்மையான முறையில் சுழல் வடிவத்தில் ஐந்துநிமிடம் மசாஜ் செய்யவும்.
5. பிறகுமென்மையான ஷாம்பூ கொண்டு தலையைஅலசவும்.
பேக்கிங்சோடா மற்றும் டீ ட்ரீஎண்ணெய்
உச்சந்தலையைசிறப்பாக சுத்தம் செய்யவும் ஆரோக்கியமானமுறையில் பராமரிக்கவும் ஒரு சக்தி வாய்ந்ததீர்வாக இருப்பது பேக்கிங் சோடா மற்றும் டீட்ரீ எண்ணெயின் ஒருங்கிணைப்பு.
தேவையானபொருட்கள்
- ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
- டீ ட்ரீ எண்ணெய் சிலதுளிகள்
- ஒரு ஸ்பூன் ஷாம்பூ
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் ஷாம்பூ சேர்க்கவும்.
2. அதில்மேலே கூறிய அளவு பேக்கிங்சோடா மற்றும் டீ ட்ரீஎண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
3. பிறகுஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில்சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ்செய்யவும்.
4. பிறகுவெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.
அஸ்பிரின்ஸ்க்ரப்
அஸ்பிரின்மாத்திரையில் சலிசிலிக் அமிலம் உள்ளது. இதுமுடி உதிர்வைத் தடுத்து, வேர்கால்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
தேவையானபொருட்கள்
. 6-8 அஸ்பிரின்மாத்திரைகள்
. 4 ஸ்பூன்வெதுவெதுப்பான நீர்
செய்முறை
1. ஒருகிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளவும்.
2. அந்தநீரில், அஸ்பிரின் மாத்திரைகளைக் கலந்து அது கரையும்வரை நன்றாகக் கலக்கவும்.
3. ஒருபிரஷ் கொண்டு உங்கள் உச்சந்தலையில்இந்த கலவையைத் தடவவும்.
4. பிறகு5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
5. பிறகுவழக்கமான ஷாம்பூ கொண்டு தலையைஅலசவும்.
6. தலையைஅலசியபின் நன்றாகக் காய விடவும்.
Nhận xét
Đăng nhận xét